புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் - பிரதீப் ஜான்

வங்கக் கடலில் உள்ள பெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும். புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக சென்னை, அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். மரக்காணம் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும்,

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

Update: 2024-11-30 04:05 GMT

Linked news