45 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரெயில்கள் இயக்கம்
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.வழக்கமான நேரத்தை விட 45 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்சார ரெயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Update: 2024-11-30 06:35 GMT