சென்னை முதல் புதுவை வரை வெளுத்து வாங்கப்போகிறது மழை.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். இது மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தீவிரமடையும்.
இந்த புயலானது சென்னை முதல் புதுவை வரை மிக மிக கனமழையைக் கொடுக்கப் போகிறது. நாளை (சனிக்கிழமை) மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மக்களே எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்று இரவு ஒரு சிறிய அளவிலான மேகக்கூட்டம் 50-60 மி.மீ. மழையை கொடுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Update: 2024-11-29 12:19 GMT