போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 34,000 ரஷிய துருப்புக்கள் அழிப்பு - உக்ரைன் ராணுவம் தகவல்

உக்ரேனிய ஆயுதப்படையின் சமீபத்திய ராணுவ விரிவுரை சமீபத்தில் வெளியானது. அதில் பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை குறைந்தபட்சம் 34,430 ரஷிய வீரர்களை உக்ரைன் தற்காப்புத் துருப்புக்கள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக, 1,500 ரஷிய டாங்கிகள் மற்றும் 756 பீரங்கி அமைப்புகள் மற்றும் 240 எம்எல்ஆர் ஆயுதங்கள் ஆகியவற்றை உக்ரைன் ராணுவம் அழித்துள்ளதாக கூறியுள்ளனர்.

Update: 2022-06-23 08:08 GMT

Linked news