மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் மரியாதை
டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இன்று 2ம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
Update: 2023-09-10 03:06 GMT