ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் தொடக்கம்
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 உச்சிமாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர்.
இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஜி20 கூட்டமைப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2023-09-10 05:57 GMT