டெல்லி ஜி20 உச்சிமாநாடு நிறைவு - பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. மாநாட்டின் இறுதியில் ஜி20 தலைமை பொறுப்பு இந்தியாவிடமிருந்து பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இதனிடையே, ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டத்தின் இறுதியில் பேசிய பிரதமர் மோடி, ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கும் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது என உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த இரு நாட்களில் நீங்கள் நிறைய ஆலோசனைகளை வழங்கினீர்கள்.

எங்களுக்கு கிடைத்துள்ள ஆலோசனைகளை மீண்டும் ஒரு முறை மீளாய்வு செய்து அவற்றின் முன்னேற்றத்தை எவ்வாறு துரிதப்படுத்தலாம் என்பதை பார்ப்பது எங்கள் கடமையாகும். வரும் நவம்பர் மாத இறுதியில் நாங்கள் காணொலி காட்சி மூலம் ஜி20 கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுக்கிறோம். இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட தலைப்புகள் குறித்து நாம் காணொலி காட்சி கூட்டத்தில் ஆலோசிப்போம். நீங்கள் அனைவரும் அந்த கூட்டத்தில் பங்கேற்பீர்கள் என நம்புகிறோம். இத்துடன் ஜி20 உச்சிமாநாடு நிறைவடைகிறது என நான் அறிவிக்கிறேன்’ என்றார்.  

Update: 2023-09-10 08:14 GMT

Linked news