தொழில் நகரை கைப்பற்ற ஆர்வம் தொழில்நகரமான... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி - விசாரணைக்கு அழைப்பு

தொழில் நகரை கைப்பற்ற ஆர்வம்

தொழில்நகரமான செவிரோடொனெட்ஸ்க், டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரம் உக்ரைனின் உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. எனவேதான் இந்த நகரை கைப்பற்றுவதில் ரஷிய படைகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

செவிரோடொனெட்ஸ்க் நகரை ரஷிய படைகள் குண்டுகளால் துளைத்தெடுத்து வருவதாக லுஹான்ஸ்க் மாகாண ஆளுநர் செர்ஹி ஹைடாய் வேதனையுடன் தெரிவித்தார். ரஷிய படைகளின் குண்டு மழையில் அந்த நகரின் முக்கிய உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ரஷிய படைகளின் தாக்குதல்களால் செவிரோடொனெட்ஸ்க் நகரில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடைவிடாமல் தொடரும் தாக்குதல்களால் அந்த நகரில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் பெரும் பீதிக்கும் அவதிக்கும் உள்ளாகியுள்ளனா் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

2 பேர் பலி

இப்படி பல முனைகளிலும் இருந்தும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதால் செவிரோடொனெட்ஸ்க் நகரம் உக்ரைனின் மற்றொரு மரியுபோல் நகரமாக மாறும் விளிம்பில் இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் ரஷிய படைகளின் கொடூர தாக்குதல்களால் பூமியில் ஒரு சுடுகாடாக மாறியதும், 3 மாத தாக்குதலுக்கு பிறகு அந்த நகரை ரஷிய படைகள் முழுமையாக கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நேற்று காலை நடத்திய பீரங்கி குண்டு தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும், 5 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்த நகரின் மேயர் தெரிவித்தார்.

உணவு பற்றாக்குறை

இந்த நிலையில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மரியுபோல் நகரில் காரில் குண்டு வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் வீரர்கள் நடத்திய பீரங்கி குண்டு தாக்குதலில் 13 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியானதாக கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்களை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுவதால் சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது.

Update: 2022-05-31 00:00 GMT

Linked news