ரஷியா உடன் பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்பாக ... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷிய போரால் உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு

ரஷியா உடன் பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்பாக ராணுவ மட்டத்தில் வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்று உக்ரைன் நினைப்பதாக உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் டேவிட் அரகமியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ புதிய ஆயுதங்களை பயன்படுத்த எங்களின் ஆயுதப்படைகள் தயராக உள்ளன.எனினும் வலுவான நிலையில் இருக்கும் போது அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார். இதனிடையே, லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க் நகரத்தை ரஷியாவிடம் இருந்து மீட்டு விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-04 14:51 GMT

Linked news