சீவிரோடோனெட்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு

உக்ரைனின் கிழக்கு பகுதியை நோக்கி ரஷியாவின் தாக்குதல் படைகள் சீராக முன்னேறி வருகிறது. இந்த நிலையில் ரஷிய படைக்கு எதிராக நடைபெற்ற எதிர் தாக்குதலில், போர்க்கள நகரமான சீவிரோடோனெட்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் இந்த அறிவிப்பு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் ரஷியாவின் படைகள் அந்த பகுதியில் வலுவாக நிலையிட்டு உள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. சீவிரோடோனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரிய எதிர்த் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Update: 2022-06-05 04:54 GMT

Linked news