செவிரோடோனெட்ஸ்க் நகரில் இருந்து பொதுமக்களை... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் உள்ள நகரின் அனைத்து பாலங்களையும் தகர்த்த ரஷிய படைகள்


செவிரோடோனெட்ஸ்க் நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு மனிதாபிமான வழித்தடத்தை திறக்கபோவதாக ரஷியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதநேயத்தின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, ரஷிய ஆயுதப் படைகளும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் அமைப்புகளும் பொதுமக்களை வெளியேற்ற ஒரு மனிதாபிமான நடவடிக்கையை ஏற்பாடு செய்ய தயாராக உள்ளன” என கூறப்பட்டுள்ளது.

மேலும் செவிரோடோனெட்ஸ்க் நகரின் அசோட் ரசாயன ஆலையில் இருக்கும் உக்ரைன் வீரர்கள் நாளைக்குள் சரணடைய வாய்ப்பு வழங்குவதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-14 23:44 GMT

Linked news