செவரோடோனெட்ஸ்க் : உக்ரைன் வீரர்கள் சரணடைய ரஷியா வலியுறுத்தல்

உக்ரைனின் முக்கிய கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்க் கடுமையான சண்டைக்குப் பிறகு இப்போது “பெரும்பாலும்” ரஷிய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்தநிலையில் ஆயுதங்களை கீழே போடுமாறு ரஷியா உக்ரைன் படைகளிடம் கூறியுள்ளது.

"தங்கள் அறிவில்லாத எதிர்ப்பை நிறுத்தி கொண்டு ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்" என்று ரஷியாவின் தேசிய பாதுகாப்பு மேலாண்மை மையத்தின் தலைவர் மிகைல் கூறியுள்ளார். மனிதாபிமான நடைபாதை வழியாக பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Update: 2022-06-15 07:57 GMT

Linked news