அசாமில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
திஸ்பூர்,
அசாமின் நல்பாரி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 6.06 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அசாமின் லக்கிம்பூர் பகுதியில் மதியம் 1.30 மணியளவில் ரிக்டரில் 3.5 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Update: 2026-01-10 09:16 GMT