ஓடும் ரெயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை செய்த நபர் குற்றவாளி என தீர்ப்பு
ஓடும் ரெயிலில் பெண்ணை பாலியல் தொல்லை செய்த நபர் குற்றவாளி என தீர்ப்பளித்தது திருப்பத்தூர் நீதிமன்றம். ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் கர்ப்பிணி ரேவதிக்கு கை, கால் தலையில் படுகாயம் ஏற்பட்டது. கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். ஹேமராஜ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிந்த நிலையில் குற்றவாளி என நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கி உள்ளார். தண்டனை விவரங்கள் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்று திருப்பத்தூர் நீதிமன்றம் கூறியுள்ளது.
Update: 2025-07-11 10:29 GMT