கிரேன் வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு
கன்னியாகுமரி: ரெயில் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கிரேன் வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். போலீசார் விசாரணையில் அதன் ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. குமரிமுனைப் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி முகமது மற்றும் கேட்டரிங் மாணவர் சபரி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
Update: 2025-09-12 12:49 GMT