மிளகாய்பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை - பரபரப்பு ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
மிளகாய்பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை - பரபரப்பு
திருச்சி - சிறுகனூர் அருகே தங்க வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் நகைகளை விற்பனை செய்துவிட்டு, 10 கிலோ தங்கத்துடன், 3 பேருடன் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி திரும்பி வந்தபோது காரை வழிமறித்து இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சமயபுரம் அருகே வந்தபோது காரை வழிமறித்து மிளகாய் பொடி தூவிய கும்பல், தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 10 கிலோ தங்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-09-14 05:34 GMT