ஒடிசாவில் நீதிக்காக போராடிய மாணவியின் மரணம்..... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
ஒடிசாவில் நீதிக்காக போராடிய மாணவியின் மரணம்.. பாஜகவின் நேரடிக் கொலை - ராகுல் காந்தி கடும் தாக்கு
காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பாஜக அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை.
தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக பேசினார் அந்த மாணவி. ஆனால் நீதி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக அவர் அச்சுறுத்தப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-15 07:42 GMT