பேரிஜம் ஏரி செல்ல தடை
திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றித் திரிவதால் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பேரிஜம் ஏரிப் பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
Update: 2025-09-15 06:45 GMT