அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்
தஞ்சாவூர் அருகே திருமங்கலக்கோட்டை கீழையூரில் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 30,000 சதுர அடி நிலத்தை அரசுப் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் (80) குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் நிலத்தை வழங்கியுள்ளதாகவும், படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும், மாணவர்கள் நன்றாகப் படித்து ஊருக்கும் பெற்றோர்க்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Update: 2025-08-17 10:07 GMT