ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் குடும்பத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி யாதவ்
பீகார் மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் மொத்த நாடும் தேர்தலை உற்று நோக்கி வருகிறார்கள்.பீகார் அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, தேஜஸ்வியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸின் இந்தியா கூட்டணி, பிரசாந்த் கிசோரின் ஜன்சுராஜ் கட்சி 3 முனை போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவ் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய தலைவர்கள் தொடங்கி மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டுள்ளனர். இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமித்ஷா ஒரே நாளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.