திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு: லாக்-அப் மரணமோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு: லாக்-அப் மரணமோ என்ற சந்தேகம் எழுகிறது..? - நயினார் நாகேந்திரன்



பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-06-29 06:38 GMT

Linked news