மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி
பிளைட் மோடில் இருந்த செல்பேசியை ஆன் செய்தபோது ஞானசேகரன் முதலில் காவல் அதிகாரியிடம் பேசினார். அடுத்த ஞானசேகரன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் அடிக்கடி பேசினார். இந்த சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தொடர்பில் இருப்பவர்.அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? ஞானசேகரன் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டது ஏன்? தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
Update: 2025-06-03 10:46 GMT