எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் - அன்புமணி தரப்பில் 7 பேர் கைது
சேலத்தில் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரைக் கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட செயலாளர் நடராஜ் அளித்த புகாரில் பூவிழி ராஜா (33), விக்னேஷ் (25), வெங்கடேசன் (37), சரவணன் (30), அருள்மணி (32), விமல் ராஜ் (22), தமிழ்ச்செல்வன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2025-11-05 10:39 GMT