கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்; 18 பேரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்; 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 பேர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-01-06 08:00 GMT

Linked news