சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம்.ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது கச்சத்தீவை மீட்பது குறித்து நடவடிக்கை இல்லாதது வேதனை அளிக்கிறது. மீனவர்கள் விடுதலை, படகுகள் விடுவிப்பு குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றார்.
Update: 2025-04-07 05:18 GMT