ஆவடி காவல் ஆணையர் சங்கர் சென்ற கார் விபத்து

ஆவடி காவல் ஆணையர் சங்கர் சென்ற கார் சோழவரம் பகுதியில் விபத்தில் சிக்கியது. பின்னால் வந்த கண்டெய்னர் லாரி குட்டி யானை மீது மோதியதில் குட்டி யானை காவல் ஆணையரின் காரை இடித்தது. குட்டி யானை கார் மீது மோதியதில் காவல் ஆனையர் சங்கர் நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். விபத்தில் காவல் ஆனையரின் பாதுகாவலர் மாரி என்பவர் காயமடைந்தார். பொன்னேரியில் முதல்-அமைச்சர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்துவிட்டு திரும்பியபோது விபத்துக்குள்ளானது.

Update: 2025-04-07 08:19 GMT

Linked news