சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்.. சஜ்ஜன் குமாருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்.. சஜ்ஜன் குமாருக்கு எதிரான கொலை வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு
1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா இன்று தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
Update: 2025-01-08 06:12 GMT