தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள பவுன்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமீன் கொடுக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கரூர் த.வெ.க. கூட்டத்தில் நெரிசலில் சிக்கியவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸின் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில், சேலத்தைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினரான மணிகண்டன், கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் கோரியுள்ளார்.

Update: 2025-10-08 09:57 GMT

Linked news