கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட முதலமைச்சர் உத்தரவு
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.1.2025) உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000/- வரவு வைக்கப்படுகிறது.
Update: 2025-01-09 06:21 GMT