சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேசனல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேசனல் பார்க் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் 31 பேரை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்ட வீரர்கள் இணைந்து இன்று காலை மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது சுட்டு கொன்றனர்.

இதற்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். நம்முடைய வீரர்களை, அவர்களின் துணிச்சலுக்காக நாம் பாராட்டுவோம். இந்த வெற்றிக்காக வீரர்களை நான் வாழ்த்துகிறேன். 2 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Update: 2025-02-09 13:14 GMT

Linked news