என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகருடன் சந்திப்பு
புதுவை துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் - முதல்-மந்திரி ரங்கசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினர். அதனை தொடர்ந்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி, முதல்-மந்திரி ரங்கசாமியின் அனுமதி பெற்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் செல்வம் கூறினார்.
Update: 2025-07-09 10:43 GMT