நாதக ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி
அஜித்குமார் கொலையைக் கண்டித்து இன்று நடக்க உள்ள நாதக ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. திருப்புவனம் சந்தை திடலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமார் மரணத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கோரி நாதகவினர் வழக்கு தொடுத்தனர்.
Update: 2025-07-09 11:28 GMT