உடல் உறுப்புகள் தானம்; தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
திருவாரூர்: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெகதீஷ் பாபு (36) என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
Update: 2025-11-09 11:49 GMT