சசிகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ராகுல் காந்தி
தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி எம்பி சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் இருந்தபடியே இன்றும் 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சசிகாந்த் செந்திலின் உடல்நலம் குறித்து ராகுல்காந்தி விசாரித்தார்.
Update: 2025-09-01 05:03 GMT