ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுகங்களால் 600 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கங்களால் குனார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்ததாக தலிபான் அரசு தகவல் வெளியாகி உள்ளது. கட்டடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2025-09-01 06:24 GMT

Linked news