ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிகட்ட பணிகள் தீவிரம்

2,035 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றனர். மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போலி டோக்கன்களை பயன்படுத்தி நுழைய முயற்சிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாடிவாசலுக்கு முன்பு தேங்காய் நார்கள் கொட்டுவது, தண்ணீர் தொட்டி வைப்பது, சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2025-01-13 06:57 GMT

Linked news