தொழில்நுட்ப கோளாறு - திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
பதான்கோட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாலட் கிராமத்தில் உள்ள திறந்தவெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பிறகு ஹெலிகாப்டர் விமானப்படை தளத்திற்கு திரும்பியுள்ளதாகவும் இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Update: 2025-06-13 10:21 GMT