பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில், மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடந்து வருகிறது. பல சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. வீரர்களும் உற்சாகத்துடன் காளைகளை பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், கட்டில், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன.
Update: 2025-01-14 03:46 GMT