தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
வடகிழக்கு பருவமழைதென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து இன்று (வியாழக்கிழமை) விலகுகிறது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா-மாஹி, தெற்கு உள் கர்நாடகம், ராயல்சீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வடகிழக்கு பருவமழையால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயல்பை விட மழை சற்று குறைவாகவும், வட மாவட்டங்களில் இயல்பை விட மழை சற்று அதிகமாகவும் பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-16 06:47 GMT