கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய நிலத்திற்கு களை எடுக்கும் போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்களும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2025-10-16 12:35 GMT

Linked news