அப்சரா ரெட்டியின் மான நஷ்ட வழக்கை மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

அப்சரா ரெட்டியின் மான நஷ்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு


அவதூறு கருத்து தெரிவித்த‌தாக யூடியூபருக்கு எதிராக அதிமுக நிர்வாகி அப்சரா ரெட்டி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க யூடியூபர் ஜோ பிரவீனுக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் யூடியூபருக்கு எதிரான அப்சரா ரெட்டியின் மான நஷ்ட வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2025-10-18 07:41 GMT

Linked news