தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எங்கே? - போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனந்த்-க்கு நெருக்கமான நிர்வாகிகளிடமும், சேலம் மாநகர், ஏற்காடு, கருமந்துறை பகுதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல், ஈரோடு, சென்னை மாவட்டங்களிலும் தனிப்படை தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-10-02 06:35 GMT