தன் உயிரை துச்சமாக எண்ணி 5 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர்
சீனா: தாய் தடுத்தபோதிலும் உயிரை துச்சமென எண்ணி, ஏரியில் தத்தளித்த 5 பேரின் உயிரை காப்பாற்றிய ஜாங் வெய் என்ற இளைஞருக்கு பாராட்டு குவிகிறது. 3 பேரை காப்பாற்றிய பின் வெய்யின் நிலை மோசமானதால் ஏரிக்குள் இறங்க வேண்டாம் என தாய் தடுக்க, “ஒருமுறை மன்னித்து விடுங்கள்" என மண்டியிட்டு மற்றவர்களை காப்பாற்றியுள்ளார். பின் மயங்கி கீழே விழ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.
Update: 2025-06-20 11:03 GMT