சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா துவக்கம்
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா நிகழ்ச்சிகள் 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு வருட கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இதையொட்டி காலை தனுர் லக்னத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வள்ளி தேவசேனா சமேத சண்முக சுவாமி, சந்திரசேகரர், வீரபாகு, வீரகேசரி சுவாமிகள் மலைக்கோவிலில் இருந்து படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் 26-ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 27ம் தேதி 7ம் திருநாளாக மகா கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுவாமிநாதன், கோயில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உபயதாரர்கள் பங்கேற்புடன் செய்து வருகின்றனர்.