நாட்டு வெடி விபத்து - காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்
திருவள்ளூர் - பட்டாபிராமில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். உதவி ஆய்வாளர் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை பிரிவில் தலைமை காவலர் பணியிட மாற்றம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-10-22 12:30 GMT