திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய புளியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலை தீப்பிடித்த போது தீயை அணைக்க முற்பட்ட விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியமே விவசாயி உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2025-05-23 06:17 GMT

Linked news