கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்கடை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்கடை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவி வருவதால் மலை அடிவாரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து, மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தது கல்லூரி நிர்வாகம். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காய்ந்த புற்கள் மற்றும் மரங்களால் வேகமாக காட்த்தீ பரவி வருகிறது.
Update: 2025-02-24 08:55 GMT