பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்
யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ள பெரியாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்? என யுபிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், 1929இல் தனது சாதிப் பின்னொட்டை நீக்கினார்.
Update: 2025-05-25 07:54 GMT