ஊட்டியில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் பலி

நீலகிரி மாவட்டம் உதகையில் மரம் முறிந்து விழுந்து, கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனமழை பெய்தபோது வீசிய பலத்த காற்றில் மரம் முறிந்து விழுந்துள்ளது. கேரளாவில் இருந்து குடும்பத்துடன் உதகைக்கு சுற்றுலா வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2025-05-25 08:39 GMT

Linked news