ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து 7 பேரின் உடல்களை போலீசார் மீட்டுள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-05-27 03:53 GMT